Home Featured கலையுலகம் எனது மரணத்திற்குப் பிறகாவது கோபத்தை விட்டுவிடு – மனைவிக்கு சாய் பிரசாந்த் உருக்கமான கடிதம்!

எனது மரணத்திற்குப் பிறகாவது கோபத்தை விட்டுவிடு – மனைவிக்கு சாய் பிரசாந்த் உருக்கமான கடிதம்!

536
0
SHARE
Ad

Sai prasath- wife sujithaசென்னை – தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் இல்லத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கடிதத்தில், ‘எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு’ என்று  தனது மனைவி சுஜிதாவுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ள  அவர், நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி,  பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து, பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்கத் தொடங்கியவர் சாய் பிரசாந்த். நேரம், வடகறி உள்ளிட்ட  பல படங்களிலும் நடிக்கத் துவங்கிய நிலையில் அவரது தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தனது மனைவி சுஜிதாவின் மீது வைத்திருந்த அதீத காதலும், மனைவியின் பிரிவுமே அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

தற்கொலை செய்துகொண்ட சாய் பிரசாந்த் இரண்டு பக்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், எழுதியிருப்பதாவது;- “எனது அன்புக்குரிய சுஜிதா சாய் பிரஷாந்துக்கு உன் மீது அதீத காதல் வைத்திருந்தேன்.  மன இறுக்கம் காரணமாக உன்னை நான்கு முறை அடித்தேன். ஆனால் கவலைப்படாதே,  எனது மரணம் உனக்கு எந்த வகையிலும் இடையூறு அளிக்காது.

எனது மரணத்திற்கு கண்டிப்பாக நீ காரணமாக இருக்க முடியாது. ஒரு சத்தியம் மட்டும் செய்கிறேன். உனது 33 சவரன் நகை கண்டிப்பாக திரும்பி வரும். எனது காதல் எப்போதும் உண்மையானது.

நான் செல்வதால் தயவு செய்து அழாதே, ரக்‌ஷிதாவும் தான் (மகள்). என் பெற்றோர்கள் கண்டிப்பாக உன்னையும் உனது குடும்பத்தாரையும் கேள்வி கேட்க மாட்டார்கள். உன் சித்தப்பா என் அப்பாவிடம் உபயோகித்த வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்கும்படி சொல்லவும். நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம்.

என் பெற்றோர் உனக்கு ஐந்து லட்சம் பணமும், உனது நகையும் கொடுப்பார்கள். எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு. நான் ரக்‌ஷிதாவுக்கு எப்போதும் ஒரு நல்ல அப்பா .

ரக்‌ஷிதா, சுஜிதா, அம்மா, அப்பா, சுஜி சித்தப்பா, நிரஞ்சனா குடும்பம், ராகுல் மற்றும் ரோகித், சுஜிதா குடும்பம், மற்றும் சரவண குமார். ரக்‌ஷிதாவின் புரிதலுக்கு ஒரு வேண்டுகோள்.  யாரும் சண்டையிடவோ அழவோ கூடாது.

நான் மட்டுமே எனக்கு பிரச்சினை. எல்லோருடனும் இணைப்பில் இருக்கவும், புரிந்துகொள். ராடான் மீடியா முக்கியமாக சன் நெட்வொர்க், என் அம்மா (ராதிகா சரத்குமார்) ஆகியோருக்கு நன்றி.

அம்மா, ரக்‌ஷிதாவுக்கு எனது ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்டு. ‘லவ் யூ தாமரை டீம்’, மற்றும் சுகுமார் அண்ணா. நன்றி நிரஞ்சனா குடும்பத்தார். “லவ் யூ மேட்லி சுஜிதா சாய் பிரசாந்த். உம்மா…. டேக் கேர் எவ்ரிபடி. உங்களை எல்லாம் சிரிப்புடன் விட்டுச் செல்கிறேன்” என்று உருக்கமாக கடிதத்தில் கூறியுள்ளார் தற்கொலை செய்து கொண்ட சின்னித்திரை நடிகர் சாய் பிரசாந்த்.