Home Featured இந்தியா நதிகளை மீட்க அன்னா ஹசாரேவுடன் இணைந்த நடிகர் சூர்யா!

நதிகளை மீட்க அன்னா ஹசாரேவுடன் இணைந்த நடிகர் சூர்யா!

748
0
SHARE
Ad

surya-anna-hazareகோயமுத்தூர் – சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து, வற்றிய நதிகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா. நடிகர் கூர்யா சமூகப் பணிகளுக்கு நேரம் ஒதுக்க எப்போதும் தயங்கியதில்லை. தன்னுடைய ‘அகரம் பவுண்டேஷன்’ மூலம் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு சூர்யா உதவிவருகிறார்.

மே மாதம் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அது தொடர்பான குறும்படங்களிலும் சூர்யா நடித்துக் கொடுத்திருக்கிறார். கோவையின் ஜீவ நதியான ‘நொய்யலை’ மீட்க ‘நொய்யலை நோக்கி’ என்ற பெயரில் நதி புணரமைப்புத் திட்டத்தை, தன்னார்வ அமைப்புகள் தொடங்கியுள்ளன.

நேற்று ‘நொய்யலை நோக்கி’ திட்டத்தின் துவக்க விழா கோவையில் நடைபெற்றது. அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசினார்.

#TamilSchoolmychoice

விழாவில் சூர்யா “3 மாதங்களுக்கு முன் மழை பெய்தாலும் தற்போது தண்ணீர் இன்றி தவித்து வருகிறோம். இந்த நிலையை மாற்ற நொய்யல் நதியை மீட்க வேண்டும். நதியை தொடக்கத்திலிருந்து புணரமைத்துச் செல்ல 4 மாவட்டங்களைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புடன் இணைந்து இளைஞர்கள், பொதுமக்கள் இங்கு முன்வந்துள்ளனர். இந்த நதியை மீட்டெடுத்து காவிரியுடன் கலக்க வைக்க முடியும். நம்மால் இதனை செய்ய முடிந்தால் இது இந்தியாவுக்கே ஒரு முன்னுதாரணமாக அமையும்” என்று பேசினார்.

suriya_anna001நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் உள்ள 68 நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், நொய்யல் நதியில் விடப்பட்டு ஆராதனைகள் செய்யப்பட்டன. இறுதியாக, ‘நொய்யல் நதியை மீட்டெடுத்துக் காப்போம்’ என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.