Home Featured கலையுலகம் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு எங்களை அழைக்கவில்லை – நடிகை ராதிகா குற்றச்சாட்டு!

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு எங்களை அழைக்கவில்லை – நடிகை ராதிகா குற்றச்சாட்டு!

724
0
SHARE
Ad

radika(1)சென்னை – நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தங்களை அழைக்கவில்லை என நடிகை ராதிகா தெரிவித்திருக்கிறார். நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில், நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தியது.

சுதீப், பாலகிருஷ்ணா, மம்முட்டி, நிவின் பாலி, சிவராஜ்குமார், வெங்கடேஷ், நாகார்ஜூனா என மற்ற மாநில நட்சத்திரங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். அதே நேரம் அஜீத், விஜய், சிம்பு, சரத்குமார், ராதாரவி, ராதிகா போன்ற முன்னணி நடிகர்கள் இப்போட்டியில் பங்கு பெறவில்லை.

இதுகுறித்து நடிகை ராதிகா கூறுகையில்; “இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் அனைவரையும் அழைத்திருந்தால், உங்களின் முதிர்ச்சி மற்றும் அனைவரிடமும் இணக்கமாக இருக்கும் தன்மை வெளிப்பட்டிருக்கும்”.

#TamilSchoolmychoice

“இதைவிட பெரிய நிகழ்ச்சிகளை நாட்டிற்காகவும், நடிகர் சங்கத்திற்காகவும் அவர்கள் (சர்த்குமார்-ராதாரவி) செய்திருக்கின்றனர். இது உங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நீங்கள் என்னை அழைக்க மறந்து விட்டீர்கள். சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை” என கூறியிருக்கிறார் ராதிகா.