Home உலகம் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்- சீனா அறிவிப்பு

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்- சீனா அறிவிப்பு

739
0
SHARE
Ad

chinaபீஜிங், மார்ச்.20- குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த சீன அரசு முடிவுசெய்துள்ளது.

இது குறித்து தேசிய வளர்ச்சி மற்றும் சீரமைப்பு கமிஷன் விடுத்துள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:-

கடற்கரை பகுதிகளான, ஷென்சென், உ லுசிசியாங் தீவு உள்ளிட்ட இடங்களில் கடல்நீரின் உப்பை அகற்றி குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

#TamilSchoolmychoice

இதற்காக, முக்கிய நிறுவனங்களுடன்  ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நீரின் பயன்பாடு குறித்து மக்களிடம் விளக்கும்படி  சம்பந்தப்பட்ட நகர நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

தீவுகளுக்கு  நன்னீரில் பாதி அளவு திருப்பிவிடப்பட்டுள்ளது. கடற்கரையோர தொழிற்சாலைகளுக்கு 15 சதவீத கடல் நீர் விநியோகிக்கப்படும்.

 

 

Comments