அவர்களின் குரல், உச்சரிப்பு, பாடல்வரிகள் என பலவற்றையும் நுணுக்கமாக ஆராய்ந்த நீதிபதிகள் பாடகர் கிரிஷ்,நடிகையும், பாடகியுமான ரம்யா மற்றும் பாடகி பிரீத்தா பிரசாத் ஆகியோர், தங்களின் வெளிப்படையான விமர்சனங்களை முன் வைத்ததோடு, அவர்களின் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வகையில் அறிவுரைகளை வழங்கி வந்தனர்.
இந்நிலையில், இறுதியாக 10 போட்டியாளர்களில், சிலாங்கூரைச் சேர்ந்த அலெக்ஸ் ராவ் (வயது 26), கோலாலம்பூரைச் சேர்ந்த குமரேஸ் (வயது 22), பினாங்கைச் சேர்ந்த நாராயணி (வயது 24), பேராக்கைச் சேர்ந்த போமதிபிரியா(வயது 20), சிலாங்கூரைச் சேர்ந்த சிந்திஹாசினி (வயது 22), பேராக்கைச் சேர்ந்த ரூபன்ராஜ் (வயது 23) ஆகிய 6 போட்டியாளர்களும் மாபெரும் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.
மூன்று பிரிவுகளாக நடைப்பெறவிருக்கும் இந்த இறுதிச்சுற்றில் நீதிபதிகளாக பிரபல பின்னணி பாடகர் கிரிஷ் மற்றும் பின்னணி பாடகி மாதங்கி வலம் வரவிருக்கின்றனர்.
இவர்களோடு, மலேசியாவின் புகழ்பெற்ற கலைஞர் ஒருவரும் இப்போட்டியில் நடுவராகப் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: Astro Ulagam