Home Featured உலகம் பிலிப்பைன்சில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்

பிலிப்பைன்சில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்

658
0
SHARE
Ad

philippines-leyte-explosionsமணிலா – பிலிப்பைன்ஸ் நாட்டின் லெய்ட் (Leyte) பிரதேசத்தின் தலைநகரான டக்லோபான் நகரில் (Tacloban) இரண்டு வெடிச் சம்பவங்களில் சுமார் 35 பேர்வரை காயமடைந்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் செல்பேசிகளின் மூலமாக இந்த வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன.

ஹிலாங்கோஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ரிசால் பிளாசா கட்டிடத்தில் குத்துச் சண்டைப் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தினரிடையே இந்த குண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன.

#TamilSchoolmychoice

காயமடைந்தவர்களில் 5 பேர் மோசமான கவலைக்கிடமான நிலைமையில் உள்ளனர்.

மூன்றாவது வெடிகுண்டு ஒன்று ஒரு கிறிஸ்துவ தேவாலயத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை.

இதுவரையில் இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.