கெடா மாநிலத்தை முன்னின்று வழிநடத்த அந்த மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர், அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கி விட்டார். கெடா மாநிலத்தை பக்காத்தான் கைப்பற்றினால், அந்த மாநிலத்தின் மந்திரி பெசாராக மீண்டும் முக்ரிஸ் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நாடாளுமன்றத் தொகுதியும் கெடாவிலேயே இருக்குமா அல்லது வேறு மாநிலத்தில் இருக்குமா என்பது இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
கெடாவுக்கு அடுத்த மாநிலம் – மிக அருகாமையில் இருக்கும் மாநிலம் – என்பதால் பெர்லிஸ் மாநிலத்தின் தலைமைப் பொறுப்பையும் முக்ரிஸ் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
துன் மகாதீர் 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், அவர் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் என்ற ஆரூடங்கள் நிலவுகின்றன.
பின்னர் பிரதமராகப் பொறுப்பேற்றவுடன், லங்காவி தீவை மேம்படுத்தி உலக வரைபடத்தில் அந்தத் தீவை இடம் பெறச் செய்தவர் மகாதீர்.
இதன் காரணமாக, லங்காவி தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் எனக் கணிக்கப்படுகிறது.
ஜோகூரில் தலைமையேற்கும் மொகிதின் யாசின்
அம்னோவின் பிறப்பிடமான ஜோகூர் மாநிலம், மொகிதின் யாசின் மந்திரி பெசாராகவும் ஆட்சி நடத்திய மாநிலமாகும்.
எனினும், தனது பாரம்பரியத் தொகுதியான பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் மொகிதின் யாசின் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஜோகூர் மாநில சட்டமன்றத் தொகுதி ஒன்றிலும் அவர் போட்டியிடுவாரா என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
- இரா.முத்தரசன்