Home இந்தியா இரட்டை இலைச் சின்னம் யாருக்கு: தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு!

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு: தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு!

901
0
SHARE
Ad

aiadmk_symbol-புதுடெல்லி – இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? என்ற விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், தினகரன் அணியினரும் இருதரப்பு வாதங்களையும் அளித்துவிட்ட நிலையில், இன்று இந்த இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலைச் சின்னம் வழங்கப்படவிருக்கின்றது என்பது இன்று தெரியவரலாம்.

அவ்வாறு தெரியப்படும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice