Home இந்தியா ஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டது – பொன்னையன் தகவல்!

ஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டது – பொன்னையன் தகவல்!

880
0
SHARE
Ad

Ponnaiyanசென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு 8 மாதங்களாக ஸ்டீராய்டு வகை மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதால் தான் அவர் மரணமடைந்திருக்கிறார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன், செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த 3 ஓட்டைகளுக்குக் காரணம், அவரை சசிகலா ஆணிக் கட்டையால் தாக்கியது தான் வந்தது என்ற பகீர் தகவலைப் பரப்பினார்.

பின்னர், செய்தியாளர்கள் அது குறித்துத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய போது, தனக்கு வாட்சாப்பில் வந்த தகவலை தான் கூறியதாக பொன்னையன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.