தாய்மொழிக் கல்விக்கென ஆரம்பப் பள்ளிகள் இருக்கும்போது, இடைநிலைப் பள்ளிகளும் இருப்பதில் தவறில்லை என மகாதீர் கூறினார்.
இந்த முக்கிய அறிவிப்பைத் தவிர்த்து மேலும் 25 முக்கிய அம்சங்களை பக்காத்தானின் இந்தியர்களுக்கான தேர்தல் அறிக்கை கொண்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் பிகேஆர் கட்சித் தலைவி வான் அசிசா, பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் ஆகியோரும் உரையாற்றினர்.
பக்காத்தானின் முக்கியத் தலைவர்கள் உட்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
துன் மகாதீரின் தமிழ் இடைநிலைப் பள்ளித் திட்டத்திற்கு தனதுரையில் ஆதரவளித்துப் பேசிய லிம் குவான் எங், பினாங்கு மாநிலம் ஏற்கனவே இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதற்கான நிலத்தையும் ஒதுக்கியிருக்கிறது என்றார்.
ஆனால் கல்வி அமைச்சுக்கு தமிழ் இடைநிலைப் பள்ளி அமைப்பதற்காக விண்ணப்பித்தபோது, நாட்டின் கொள்கையோடு இந்தத் திட்டம் முரண்படுகிறது எனக் காரணம் காட்டி கல்வி அமைச்சு இந்தத் திட்டத்தை நிராகரித்து விட்டது என்றும் லிம் குவான் எங் கூறினார்.
பின்னர் உரையாற்றிய பிகேஆர் கட்சித் தலைவி டாக்டர் வான் அசிசாவும், தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கான தங்களின் கடப்பாட்டைத் தெரிவித்துக் கொள்வதாக பிகேஆர் கட்சியின் சார்பில் அறிவித்தார்.