வட கொரியாவின் 45 வயதுடைய கிம் ஜோங் நம் அல்லது கிம் சோல் என்ற பெயர் கொண்டவரைக் கொலை செய்ததற்காக குற்றம் சாட்டப்படுள்ள இருவரும் இன்று காலை பலத்த காவலுடன் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின், ஒன்றுவிட்ட சகோதரரான 45 வயதான கிம் ஜோங் நம்மை விஷ அமிலம் கொண்ட துணியின் மூலம் கொலை செய்ததற்காக அந்த இருவரும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் -2 இன் புறப்பாடு வளாகத்தில் காலை 9.00 மணியளவில் அவர்கள் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.