இன்று கொண்டாடப்படும் வல்லபாய் படேலில் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு திறக்கப்படும் இந்த சிலை உலகிலேயே மிக உயரமான சிலையாகும். “ஒற்றுமை சிலை” என இந்த சிலை வர்ணிக்கப்படுகிறது.
திறப்புவிழா விழாவின் போது வல்லபாய் படேலின் சிலை மீது இராணுவ விமானங்கள் பூக்களைத் தூவின.
பத்மபூஷன் விருது பெற்ற இந்தியாவின் முன்னணி சிற்பி ராம் வி சுதார் வடிவமைத்த இந்த சிலையை உருவாக்க 250 பொறியியல் வல்லுநர்களும் 3,400 தொழிலாளர்களும் சுமார் 33 மாதங்கள் உழைத்திருக்கின்றனர். லார்சன் டர்போ நிறுவனமும் இணைந்து இந்த சிலையின் கட்டுமானத்தில் பங்காற்றியிருக்கிறது.
பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட திறப்பு விழா காட்சிகளையும், சர்தார் வல்லபாய் படேலின் சிலையின் பிரம்மாண்டமானத் தோற்றங்களையும் இங்கே காணலாம்: