எந்தவொரு கட்சியின் அரசியல் நலனுக்காகவும், இந்த விவகாரத்தை அரசியல் பிரச்சனையாக பார்க்க வேண்டாமென்றும், மாறாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மொழியாக ஆங்கிலம் திகழ்வதால், அம்மொழிக்கு, கல்வியாளர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என நம்புவதாக பிரதமர் கூறினார்.
இதற்கிடையே, தேசியப் பள்ளிகளில் மத போதனைப் பாடங்களுக்குப் பதிலாக இதர பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கும்படியாக பிரதமர் கூறியிருந்ததற்கு, பல்வேறு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, ஆங்கிலம், அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் போதிக்க வேண்டுமென்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.