Home உலகம் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமான விபத்து – மலேசியர்கள் யாருமில்லை

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமான விபத்து – மலேசியர்கள் யாருமில்லை

824
0
SHARE
Ad

அடிஸ் அபாபா (எத்தியோப்பியா) – எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி நோக்கிச் சென்று கொண்டிருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 149 பயணிகள் மற்றும் 8 விமானப் பணியாளர்களில் யாரும் உயிர்பிழைக்கவில்லை என அந்த விமான நிறுவனம் அறிவித்திருக்கிறது.

விமானம் விழுந்த இடத்தில் அதன் பாகங்கள் உடைந்து சிதறி ஆங்காங்கே காணப்படுகின்றன என ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த போயிங் 737-800MAX  இரக விமானம் ET 302 என்ற வழித் தடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது உள்ளூர் நேரப்படி காலை 8.38 மணிக்கு விமான நிலையத்துடனான தனது தொடர்பினை இழந்தது.

#TamilSchoolmychoice

அடிஸ் அபாபா நகரின் தென்கிழக்கு பகுதியில் இந்த விமானம் விழுந்தது.

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் அறிக்கையின்படி இந்த விபத்தில் மரணமடைந்தவர்களில் மலேசியா நாட்டைச் சேர்ந்தவர்கள் யாருமில்லை.

இந்தியா நாட்டைச் சேர்ந்தவர்கள் 4 பேர் எனத் தெரிவிக்கப்பட்டது. பயணிகளில் பெரும்பான்மையானோர் கென்யா மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.