Home கலை உலகம் கண்டனம் தெரிவித்த ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி

கண்டனம் தெரிவித்த ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி

1151
0
SHARE
Ad

சென்னை: திரையுலக நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நயன்தாராவை இழிவாகப் பேசிய நடிகர் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்ததோடு அவரைக் கட்சியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், தன்னை இழிவுபடுத்திப் பேசிய ராதாரவிக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் நயன்தாரா கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில் தான் பேசிய பேச்சு நயன்தாராவுக்கும் அவரை மணக்கப் போகும் விக்னேஷ் சிவனுக்கும் மனவருத்தம் ஏற்படுத்தியிருப்பதால் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ராதா ரவி தொலைக்காட்சி ஊடகங்களின் வழி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

‘பில்லா 2’ திரைப்பட இயக்குனர், சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவானகொலையுதிர் காலம்என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இதன் முன்னோட்டக் காட்சி சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில், ராதாரவி நயன்தாரா ஒரு சிறந்த நடிகை எனக் கூறி, பின்பு, அவரைப் பற்றி வெளிவராத செய்திகளே கிடையாது எனவும், பேயாகவும் நடிக்கிறார், சீதாவாகவும் நடிக்கிறார் எனப் பேசியுள்ளார்.  முன்பு மாதிரி எல்லாம் இல்லை, தற்போது யார் வேண்டுமானாலும் ‘இறைவன்’ வேடத்தில் நடிக்கலாம் எனக் கூறி, அப்பாத்திரத்தில் உள்ளவர்கள் கும்பிடும்படியும், கூப்பிடும்படியும் உள்ளார்கள் என இழிவாகப் பேசியுள்ளார்.