Home நாடு இறைவழி நாடி, உற்றார் உறவினருடன் கொண்டாடுவோம் – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

இறைவழி நாடி, உற்றார் உறவினருடன் கொண்டாடுவோம் – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

768
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் மலேசிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“ஒரு மாத காலம் இறைவனுக்கு வாக்களித்த கடமைதனை நிறைவேற்றி, பின்னர் மனநிறைவுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும், இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உலக மக்கள் உய்ய உணவு மிகவும் முக்கியமாகும் உணவின்றி உலகில்லை. உணவின்றி பசித்திருப்பவர்களின் உணர்வுகளை அறிந்து, ஏழை மக்களின் துயரங்களை உணர்ந்து, ஒரு மாத கால ரம்லான் மாதத்தில் நோன்புப் பெருநாள் பின்பற்றப்படுகிறது. பொறுமை, மனித நேயம், துன்பம் போன்றவற்றினை பொறுமையோடு காத்து, உயர்வான சிந்தனைகளை மனத்திற்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய நாளின் பொருளாகும். அந்த வகையில், இஸ்லாமியர்களின் நோக்கங்களை உள்வாங்கிக் கொண்டு, பல்லினங்கள் வாழும் இந்நாட்டில் இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழும் பண்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

அந்த வகையில், நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய அன்பர்கள் அனைவரும் இறைவழி நடந்து, இறை ஒளியை நாடி தங்களது உற்றார், உறவினருடன் கலந்து உறவாடி, புத்தாடைகள் உடுத்தி மகிழ்ச்சியுடன் இப்பெருநாளை கொண்டாட வேண்டுமென்று, நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மேலும் கேட்டுக் கொண்டார்.