Home One Line P1 ஆகஸ்டு 26 வரை ப.சிதம்பரத்தை கைது செய்யத் தடை!

ஆகஸ்டு 26 வரை ப.சிதம்பரத்தை கைது செய்யத் தடை!

804
0
SHARE
Ad

புது டில்லி: வருகிற ஆகஸ்டு 26-ஆம் தேதி வரையிலும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனிடையே, டில்லி உயர் நீதிமன்றம், .என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கொடுக்க மறுத்ததற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முறையிட்டிருந்தார். அந்த மேல்முறையீட்டு மனு மீது வருகிற திங்கட்கிழமை விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கொடுக்காததை அடுத்து, சிபிஐ அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராகத்தான் சிதம்பரம் முறையிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

நேற்று வியாழக்கிழமை, சிறப்பு நீதிமன்றம், .சிதம்பரத்தை சிபிஐ தடுப்புக் காவலில் விசாரணைக்காக ஐந்து நாட்கள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.