Home One Line P2 ‘நிசப்தம்’: பாகுபலி, பாகமதிக்கு பிறகு சத்தமின்றி அடுத்த படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா!

‘நிசப்தம்’: பாகுபலி, பாகமதிக்கு பிறகு சத்தமின்றி அடுத்த படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா!

1580
0
SHARE
Ad

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முக்கியப் பாத்திரங்களில் சிறப்பான தமது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய அனுஷ்கா தற்போது நடிகர் மாதவனுடன் இணைந்து ‘நிசப்தம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

பாகுபலியின் வெற்றிக்கு பின் இவர்பாகமதிபடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து இவர்நிசப்தம்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு இந்தியர்களுக்கும் அமெரிக்க காவல் துறைக்கும் நடக்கும் குற்றவியல் திகில் படமாக இது உருவாகி உள்ளது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் திரைக்கு வருவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நிசப்தம் படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் அனுஷ்கா ஓவிய கலைஞராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.