Home One Line P1 “சவுதி எண்ணெய் கிணறுகள் தாக்குதலில் ஈரான் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன”

“சவுதி எண்ணெய் கிணறுகள் தாக்குதலில் ஈரான் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன”

694
0
SHARE
Ad

ரியாத் – கிழக்கு சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கிணறுகள் வளாகத்தின் மீது சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகள் சார்பில் அதன் பேச்சாளரும் இராணுவ அதிகாரியுமான துர்கி அல் மால்கி தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஈரானிய ஆயுதங்கள் என்பது முதல் கட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாகக் கூறினார். ஆனால் அந்த ஆயுதங்கள் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

ஒரு சில தரப்புகள் கூறியிருப்பதைப் போல் அந்தத் தாக்குதல் ஏமன் நாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டவை என்பதையும் அவர் மறுத்தார்.