Home One Line P1 “உலக அளவில் நாட்டிற்கு புகழ் அளித்த கல்வியாளர்களை அரசாங்கம் அங்கீகரிக்கிறது!”- மகாதீர்

“உலக அளவில் நாட்டிற்கு புகழ் அளித்த கல்வியாளர்களை அரசாங்கம் அங்கீகரிக்கிறது!”- மகாதீர்

471
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பல்வேறு அறிவுத் துறைகளில் மலேசியாவுக்கு அனைத்துலக அரங்கில் புகழ் அளித்த கல்வியாளர்களை அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

இந்த விருதை அங்கீகரிப்பதன் மூலம், இது நமது கல்வியாளர்களிடையே கல்வித் திறனை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மேலும் நாட்டின் உயர் கல்வியை நிலைநிறுத்த அவர்களை மேலும் தூண்டுகிறதுஎன்று அவர் 13-வது தேசிய கல்வி விருது (AAN) நிகழ்ச்சியில் உரையாற்றும்போது கூறினார்.

கல்வியாளரும் சுற்றுச்சூழல் மறுவாழ்வு நிபுணருமான டாக்டர் ஜாக்ரி அப்துல் ஹமீட்டுக்கு இவ்வாண்டு விருது வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அவர் முந்தைய நிர்வாகத்தின் போது பிரதமரின் அறிவியல் ஆலோசகராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார்.

அக்டோபர் 24 அன்று, டாக்டர் ஜாக்ரி ஐநாவிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கு அளித்த பங்களிப்புக்காக விருதையும் பெற்றார்.

விருது பெற்றவர்கள், மற்ற கல்வியாளர்களுக்கு முனைவர் பட்டத்தைத் தாண்டி தொடர்ந்து தங்கள் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று மகாதீர் கூறினார்.

மலேசியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் உலகின் முன்னணி கல்வி வழங்குநர்கள் மத்தியில் வலுவான நிலையை அடைந்துள்ளன. மலேசியா இப்போது அனைத்துலக மாணவர்களுக்கான சிறந்த கல்வி தேர்வு இடங்களில் ஒன்றாகும்என்று அவர் மேலும் கூறினார்.