Home One Line P1 அஸ்மின் அலி மீது 328,901 பாக்கித் தொகைக்காக வழக்கு தொடுக்கிறது பயண நிறுவனம்

அஸ்மின் அலி மீது 328,901 பாக்கித் தொகைக்காக வழக்கு தொடுக்கிறது பயண நிறுவனம்

604
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொருளாதாரத் துறைக்கான அமைச்சர் அஸ்மின் அலி விமானப் பயணக் கட்டணச் சீட்டுகள், தங்கும் விடுதிக்கான கட்டணங்கள் என 328,901 ரிங்கிட் தொகையைப் பாக்கியாகத் தங்களுக்குச் செலுத்த வேண்டுமென ஒய்.எச்.ஏ டிராவல் அண்ட் டூவர்ஸ் (YHA Travel & Tours Sdn Bhd) என்ற பயண நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

செப்டம்பர் 2018 முதல் ஆகஸ்ட் 2019 வரை அஸ்மின் அலியின் பயணங்கள், விடுதிகளில் தங்கியது ஆகியவை தொடர்பில் இந்தப் பாக்கி செலுத்தப்பட வேண்டுமென அந்த வழக்கின் மனு தெரிவிக்கிறது என மலேசியாகினி இணைய ஊடகத்தின் செய்தி தெரிவிக்கிறது.

அஸ்மின் அலி, அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அமைச்சு ஊழியர்கள் ஆகியோருக்கும் சேர்த்து இந்தக் கட்டணப் பாக்கி ஏற்பட்டுள்ளதாக அந்த வழக்கு மனு குறிப்பிடுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த 20 ஆண்டுகளாக எந்தவிதப் பிரச்சனையும் இன்றி அஸ்மினுடன் வணிகத் தொடர்புகள் கொண்டிருப்பதாகவும், பாக்கித் தொகையைக் கேட்டு இரண்டு கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பியும் அஸ்மின் தரப்பிலிருந்து எந்தவிதப் பணமும் செலுத்தப்படாத காரணத்தால்தால் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் ஒய்.எச்.ஏ பயண நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.