Home One Line P1 கோலா தெர்லா: “வான் அசிசா, ஜசெக செய்து கொடுத்த வாக்குறுதி எங்கே?”- மசீச

கோலா தெர்லா: “வான் அசிசா, ஜசெக செய்து கொடுத்த வாக்குறுதி எங்கே?”- மசீச

739
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலா தெர்லா விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி வாக்குத் தவறிவிட்டதாக மசீச உதவித் தலைவர் டி லியான் கெர் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை கேமரன் மலையில் சட்டவிரோத விவசாயிகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை தொடர்பில் எழுவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் தொடங்கிஓப்ஸ் லெஸ்டாரி 2’ தொடர மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது நம்பிக்கைக் கூட்டணி மற்றும் ஜசெக ஆகியோரால் மீறப்பட்ட மற்றொரு வாக்குறுதியாகும். துணைப் பிரதமர் (வான் அசிசா வான் இஸ்மாயில்) மற்றும் பகாங் மந்திரி பெசார் (வான் ரோஸ்டி வான் இஸ்மாயில்) கூட்டு அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுஎன்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஜனவரி 26-ஆம் தேதியன்று தேசிய முன்னணி கேமரன் மலை இடைத்தேர்தலில் வென்ற பிறகு, நம்பிக்கைக் கூட்டணி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு எதிராக சுங்கை இச்சாட் அருகே சட்டவிரோதமாக நீர்ப்பிடிப்பு பகுதிக்குள் நுழைந்த விவசாயிகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள், குறிப்பாக ஜசெகவிலிருந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் கேமரன் மலை இடைத்தேர்தலின் போது, மாநில அரசால் கட்டுப்படுத்தப்படும் விவசாயிகளை மத்திய அரசு பாதுகாக்கும் என்று உறுதியளித்திருந்தனர்.”

நம்பிக்கைக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் மாநில அரசாங்கம் வெளியேற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கேமரன் மலை விவசாயிகளைப் பாதுகாக்கவும், உதவவும் அரசு மற்றும் ஜசெக மீண்டும் மீண்டும் அரசியல் வாக்குறுதிகள் அளித்ததை மசீச, வான் அஜிசாவுக்கு நினைவூட்டுகிறது.”

வான் அசிசா இதற்கு பொறுப்பேற்று, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் இதுஎன்று அவர் கூறினார்.