Home One Line P1 “இவர்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காகவா மக்கள் வாக்களித்தனர்?”- ராம் கர்பால்

“இவர்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காகவா மக்கள் வாக்களித்தனர்?”- ராம் கர்பால்

705
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

ஜோர்ஜ் டவுன்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பின்னணியில் எந்தவொரு அரசியல் சூழ்ச்சிகளும் இருக்கக்கூடாது என்றும், மக்கள் இதனை கருத்தில் கொண்டு நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்றும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கூறினார்.

அரசாங்கத்தில் இத்தகைய மாற்றத்தை அனுமதிப்பதால் அடுத்த தேர்தல்களில் மக்கள் நம்பிக்கைக் கூட்டணியை புறக்கணிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

“அம்னோ மற்றும் பாஸ் போன்றவர்களை உள்ளடக்கிய ஒரு பக்காத்தான் நேஷனலுக்கு மக்கள் வாக்களித்தார்களா ?” என்று அவர் நேற்று திங்கட்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

#TamilSchoolmychoice

“14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவர்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தின் ஒரு “மறுசீரமைப்பை” மக்கள் எதிர்பார்த்தார்களா?”

“நாம் மீண்டும் மக்களிடம் செல்லும் நேரம் இது. நாம் இங்கே இருப்பதற்கு மக்கள்தான் காரணம், வேறு எதையும் காரணமாகக் கூற இயலாது.”

“அவர்கள் ஒரு புதிய மலேசியாவைத் தேர்ந்தெடுத்தார்கள். சீர்திருத்தங்களைக் கனவு கண்டார்கள்.”

“பின்னணியில் அரசியல் சூழ்ச்சிகள் இருந்தால், அது இப்போது நிறுத்தப்பட வேண்டும் அல்லது அடுத்த தேர்தல்களில் மக்களின் கோபத்தை எதிர்கொள்வோம்” என்று அவர் கூறினார்.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, இது பக்காத்தான் நேஷனல் என அழைக்கப்படுகிறது. இது ஒரு மலாய்-முஸ்லீம் அரசாங்கமாக இருப்பதை அது உறுதி செய்வதாகும்.

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் டாக்டர் மகாதீரை ஆதரிப்பதற்கான நம்பிக்கை தீர்மானத்தை முன்வைப்பதாகவும் பாஸ் கூறியுள்ளது.

“இன்று, நம்மிடையே அரசியல் தவளைகள் உள்ளன, அவர்களின் வாக்காளர்கள் விரும்பியதைப் பொருட்படுத்தாமல், ஒரு சிறந்த எதிர்காலத்தின் ஆரம்ப வாய்ப்பில் மீண்டும் குதிக்கத் தயாராக உள்ளனர்,” என்று ராம்கர்பால் கூறினார்.