Home One Line P1 “என் வழக்கு வழக்கம் போல் தொடரும்- மற்ற வழக்குகளைப் போல கைவிடப்படாது!”- சாஹிட் ஹமீடி

“என் வழக்கு வழக்கம் போல் தொடரும்- மற்ற வழக்குகளைப் போல கைவிடப்படாது!”- சாஹிட் ஹமீடி

514
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெரிகாத்தான் கூட்டணி அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், நீதிமன்றத்தில் தனது பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்தை துடைக்க விரும்புவதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

நம்பிக்கை மோசடி, பணமோசடி செய்தல் மற்றும் இலஞ்சம் வாங்குதல் ஆகிய 47 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், பிரதமர் மொகிதின் யாசினுடனான சந்திப்பின் காரணமாக, அவரது வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.

“நாளை, மார்ச் 3-ஆம் தேதி, என் வழக்கு வழக்கம் போல் தொடரும். இதற்கு முன் மற்ற வழக்குகளைப் போல வழக்கு கைவிடப்படவில்லை.”

#TamilSchoolmychoice

“வழக்குகள் கைவிடப்படாமல் நீதிமன்றத்தில் எனது பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்தை துடைப்பேன்.”

இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டதாக இருந்தபோதிலும், அவரது வழக்கை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

முன்னாள் துணைப் பிரதமராக இருந்த சாஹிட், அகால்புடி அறக்கட்டளை நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு இலஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.