Home One Line P1 “எனது 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்த எனக்கு வாய்ப்பு கொடுங்கள்!”- மொகிதின் யாசின்

“எனது 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்த எனக்கு வாய்ப்பு கொடுங்கள்!”- மொகிதின் யாசின்

508
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், நாட்டுக்கு சிறப்பாக சேவை செய்த துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பிரதமரானப் பிறகு தனது முதல் உரையில் கூறிய அவர், தமது பொறுப்பை நிறைவேற்றுவதில் தனக்கு வலுவான ஆதரவை வழங்குமாறு மலேசியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

“மலேசியாவை பெருமையான இடத்திற்குக் கொண்டு செல்ல எனது 40 ஆண்டுகால அரசியல் மற்றும் அரசாங்க அனுபவத்தைப் பயன்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.”

#TamilSchoolmychoice

“இந்த புதிய நிர்வாகத்தின் கீழ் அரசாங்கத்தின் மற்றும் நாட்டின் முக்கிய அமைப்பதற்கு எனக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது எதிர்காலத்தில் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”

“பொறுமையுடன் நாட்டில் நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்பை எதிர்கொண்ட பல சகோதர சகோதரிகளுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.