Home One Line P1 சித்திரைப் புத்தாண்டு, விஷு, வைசாகி வாழ்த்துகளை தெரிவித்த மாமன்னர் தம்பதியினர்!

சித்திரைப் புத்தாண்டு, விஷு, வைசாகி வாழ்த்துகளை தெரிவித்த மாமன்னர் தம்பதியினர்!

990
0
SHARE
Ad

கோலாலம்பூர்: விஷு, சித்திரைப் புத்தாண்டு மற்றும் வைசாகி தினங்களைக் கொண்டாடுபவர்களுக்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

“விஷு மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். மலையாளி மற்றும் தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். ஒரு வளமான, அமைதியான மற்றும் மகிழ்ச்சியான ஆண்டை நீங்கள் வரவேற்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“இப்போது கடினமாக நேரமாக இருந்தாலும், ஒரு தேசமாக நாம் இதனை எதிர்கொள்வோம். நம்பிக்கையையும் தைரியத்தையும் வைத்திருங்கள். ஒன்றாக நாம் வெற்றி பெறுவோம். வீட்டிலேயே இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள் ”என்று இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் மாமன்னர் தம்பதியரின் வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது.

வைசாகியைக் கொண்டாடுபவர்களுக்கு, அரச தம்பதியினர்,

“எங்கள் பஞ்சாபி நண்பர்கள் அனைவருக்கும் இனிய வைசாகி வாழ்த்துகள்! மகிழ்ச்சி, ஆசீர்வாதம் மற்றும் செழிப்பு நிறைந்த ஒரு வருடத்தை உங்களுக்காக நாங்கள் விரும்புகிறோம். இந்த கடினமான காலங்களில் வலுவாக இருங்கள், வீட்டிலேயே இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள்.”

“நாம் இப்போது நம் அன்புக்குரியவர்கள் அனைவரிடமிருந்தும் விலகி இருக்கலாம், ஆனால் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது நாம் ஒரு தேசமாக ஒன்றாக இருக்கிறோம். இது நல்லதாக மாறும். ஒரு குடும்பமாக, ஒரு நாடாக, மலேசியர்களாக நாம் உறுதி செய்வோம், ”என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.