அந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாமன்னர் தம்பதியர் அனைத்து முஸ்லீம் பெருமக்களுக்கும் தங்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதற்கிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரின் முக்கிய வீதிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடிக் கிடந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தொடங்கி 3 நாட்களுக்கு வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
வெள்ளிக்கிழமை முதற்கொண்டு மலாய்-முஸ்லீம் சகோதர இனத்தினர் நோன்புப் பெருநாளைக் கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கினர்.