Home One Line P1 ஈப்போ: உணவகத்தில் மது, உணவு அருந்தி கொண்டிருந்த 10 இந்திய நாட்டவர்கள் கைது!

ஈப்போ: உணவகத்தில் மது, உணவு அருந்தி கொண்டிருந்த 10 இந்திய நாட்டவர்கள் கைது!

338
0
SHARE
Ad

ஈப்போ: நேற்று இரவு செவ்வாய்க்கிழமை இங்குள்ள ஜாலான் துன் அப்துல் ரசாக் வாழை இலை உணவகத்தில் உணவு மற்றும் மது அருந்தியதற்காக 10 இந்திய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸ்மாடி அப்துல் அசிஸ் கூறுகையில், 19 முதல் 44 வயதுடைய இந்திய நாட்டினர் பேராக் காவல் துறை தலைமையகத்தில் இரவு 8.50 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

“ஈப்போ பாராட்டில் கொவிட் -19 ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், உணவகத்தில் இருந்து உரத்த சத்தம் கேட்டதுடன், கதவைத் திறந்துள்ளனர். 10 ஆண்கள் மது அருந்துவதையும், சாப்பிடுவதையும் கண்டறிந்தனர்” என்று பெர்னாமாவிடம் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அவர்களது வீடு கடையிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் அமைந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உணவகத்தின் வணிக உரிமத்தையும், மூன்று மது பாட்டில்களையும் காவல் துறை பறிமுதல் செய்ததாகத்  தெரிவித்துள்ளது.

“கைது செய்யப்பட்ட அனைவருமே நாட்டில் கொவிட்-19 பரவியதைத் தொடர்ந்து அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை தெரிந்து வைத்திருப்பதை ஒப்புக் கொண்டனர்” என்று அவர் கூறினார்.