Home One Line P1 மகாதீர் உட்பட ஐவர் உறுப்பியத்தை இழந்துள்ளனர், நீக்கப்படவில்லை

மகாதீர் உட்பட ஐவர் உறுப்பியத்தை இழந்துள்ளனர், நீக்கப்படவில்லை

601
0
SHARE
Ad

கோலாலம்பூர்: துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் பெர்சாத்து கட்சியின் மற்ற நான்கு தலைவர்கள் தங்கள் உறுப்பியத்தை அவர்களின் நடவடிக்கையால் இழந்தனர், ஆனால் அவர்கள் வெளியேற்றப்படவில்லை என்று உள்துறை அமைச்சரும் பெர்சாத்து பொதுச்செயலாளருமான டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் வலியுறுத்தினார்.

கட்சி அரசியலமைப்பிற்கு எதிராகச் நடந்துக் கொண்டதால் ஐந்து பேரும் தங்கள் உறுப்பியத்தை இழந்தனர், மேலும் அவர்கள் பெர்சாத்து தலைமையகத்திற்கு வர விரும்பினால் இப்போது அனுமதி கேட்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

மே 18 அன்று, பெர்சாத்து முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதீர், டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், சைட் சாதிக், டாக்டர் மஸ்லீ மாலிக் மற்றும் டத்தோ அமிருடின் ஹம்சா ஆகியோர் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை வெளியேற்ற சதித்திட்டம் தீட்டியதாக ஹம்சா கூறினார்.

#TamilSchoolmychoice

“டாக்டர் மகாதீர் இனி தலைவர் அல்ல, அவர் எதையும் சொல்ல முடியும், ஆனால் இன்று அவர் தலைவர் மட்டுமல்ல, அவர் கட்சியின் உறுப்பினரும் அல்ல.

“நீங்கள் இனி உறுப்பினராக இல்லாதிருந்தால், இனி இங்கு வர வேண்டாம் (பெர்சாத்து கட்சி தலைமையகம்). ஆனால் ,நீங்கள் வர விரும்பினால், நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள், ஆயினும், நீங்கள் அவ்வப்போது அனுமதி கேட்க வேண்டும்.

“யாராவது ஏற்கனவே உங்கள் அறையை எடுத்துக் கொண்டால், நீங்கள் உள்ளே நுழைவீர்களா? எங்களிடம் நடைமுறைகள் உள்ளன. எங்கள் விதிகளைப் பின்பற்றுங்கள் ” என்று ஹம்சா கூறினார்.

முன்னதாக, பெர்சாத்து கட்சி அமைப்பு செயலாளர் வெளியிட்ட கடிதங்கள், அரசியலமைப்பிற்கு எதிரான சொந்த நடவடிக்கைகளின் மூலம், அவர்களின் உறுப்பியத்தை நிறுத்தியுள்ளதாகவும், வெளியேற்றப்பட்ட கடிதங்கள் அல்ல என்றும் ஹம்ஸா கூறினார்.