Home நாடு வேதமூர்த்தி ஹம்சாவுக்கு கடிதம்: “இன-மதம் மீதிலான அரச விசாரணை ஆணையம் அமையுங்கள்”

வேதமூர்த்தி ஹம்சாவுக்கு கடிதம்: “இன-மதம் மீதிலான அரச விசாரணை ஆணையம் அமையுங்கள்”

50
0
SHARE
Ad
பொன்.வேதமூர்த்தி

கோலாலம்பூர்: மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரும் ஹிண்ட்ராப் போராளியுமான பொன்.வேதமூர்த்தி (Malaysian Adancement Party – MAP) எதிர்க்கட்சி தலைவர் ஹம்சா சைனுடினுக்கு எழுதியுள்ள கடிதத்தின் மூலம் இனம், மதம் விவகாரங்களில் அரச விசாரணை ஆணையம் (RCI) அமைப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

“மலேசியா ஒரு சந்திப்பில் நிற்கிறது. ஒற்றுமையை வெறும் வார்த்தைகளால் மட்டும் கட்டமைக்க முடியாது. அவ்வாறு செய்வது அதிருப்திகளை எழுப்பும் என்றாலும் செயல்பட தைரியம் தேவை. எதிர்க்கட்சி தலைவராக, உங்கள் பார்வை வெறும் அரசியல் வசதிக்காக அல்ல, மாறாக ஒவ்வொரு குடிமகனும் – இனம், மதம் அல்லது பின்னணி பாராமல் – காணப்படுவதாகவும், கேட்கப்படுவதாகவும், மரியாதையுடன் நடத்தப்படுவதாகவும் உணரும் மலேசியாவை கட்டியெழுப்புவதற்கான நேர்மையான நடவடிக்கை என்பதை காட்ட உங்களுக்கு தனித்துவமான வாய்ப்பு உள்ளது,” என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் உரையாற்றும் ஹம்சா சைனுடின்

கடந்த மாதம் சிங்கப்பூரில் உள்ள ஐசியாஸ்-யூசோஃப் இஷாக் அமைப்பின் கூட்டத்தில் பேசிய பெரிக்காத்தான் கூட்டணியின் துணைத் தலைவரான ஹம்சா சைனுடின், “ஓர் இனம், ஒரு மதம் என்பது ஒரு வட்டாரத்திற்கு மட்டுமே என வரையறுக்கப்படக்கூடாது” என்று வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

“உங்கள் தோலின் நிறம் அல்லது உங்கள் அஞ்சல் குறியீடு என்பதைக் கொண்டு உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கும் மலேசியாவை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்றும் ஹம்சா சிங்கப்பூரில் கூறினார்.