Home நாடு சைட் சாதிக் விடுதலை – மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

சைட் சாதிக் விடுதலை – மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

914
0
SHARE
Ad
சைட் சாதிக் அப்துல் ரஹ்மான்

கோலாலம்பூர் : முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரும் மூடா கட்சித் தலைவருமான சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் மீதான குற்றவியல் வழக்கில் அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று புதன்கிழமை (ஜூன் 25) விடுதலை செய்யப்பட்டார்.

அவர் மீது 1.12 மில்லியன் மதிப்புடைய பெர்சாத்து கட்சிப் பணம் மீதிலான நம்பிக்கை மோசடி, பண மோசடி, கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பிலான 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, உயர்நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்திருந்தது.

சைட் சாதிக்கிற்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு பிரம்படிகளும், 10 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பையும், தண்டனையையும் எதிர்த்து சைட் சாதிக் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

அந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்ற நீதிபதி தவறுதலாக தீர்ப்பு வழங்கியுள்ளார் எனக் கூறி சைட் சாதிக்கை விடுதலை செய்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நீடித்து வந்த வழக்கில் இருந்து விடுதலையான நிம்மதியை சைட் சாதிக் இன்று பெற்றுள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதால் சைட் சாதிக் மூடா கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக கட்சியின் துணைத் தலைவர் அமிரா ஆயிஷா அப்துல் அசிஸ் இடைக்காலத்திற்கு மூடா கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

இனி மூடா கட்சியின் தலைமைப் பொறுப்பை சைட் சாதிக் மீண்டும் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் தீவிர அரசியலுக்கு அவர் திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சைட் சாதிக் மூவார் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து நீடிக்கிறார்.