Home One Line P1 கொவிட்19: 164 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

கொவிட்19: 164 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

357
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 புதிய கொவிட்19 பாதிப்புகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,639-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 2 பாதிப்புகளில், ஒரு சம்பவம் இறக்குமதி செய்யப்பட்டதாகும். உள்ளூரிலேயே ஒருவர் தொற்றுக் கண்டுள்ளார்.

இன்று 20 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,354-ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

நாட்டில் மொத்தம் 164 பேர் மட்டுமே இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருவருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.