Home One Line P1 பிடிபிடிஎன் கடனை டிசம்பர் வரை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை

பிடிபிடிஎன் கடனை டிசம்பர் வரை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை

506
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய உயர் கல்வி நிதிக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான ஒத்திவைப்பை இன்னும் மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் நீடித்துள்ளது.

அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்ட ஒத்திவைப்பு இருக்கும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அகமட் தெரிவித்தார்.

“இது 375 மில்லியன் மதிப்பிடப்பட்ட திருப்பிச் செலுத்தும் கடன்களை உள்ளடக்கியது.

#TamilSchoolmychoice

“அனைத்து பிடிபிடிஎன் கடன் பெற்றவர்களும், ஒத்திவைப்புக்காக விண்ணப்பிக்கத் தேவையில்லை.

“கடன் திருப்பிச் செலுத்த விரும்பும் கடன் பெற்றவர்கள் இருந்தால், இயங்கலை மூலம் திருப்பிச் செலுத்தும் தளத்தில் அவர்கள் அவ்வாறு செய்யலாம்” என்று செவ்வாயன்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

கொவிட்19 காரணமாக வேலைகள் மற்றும் வருமான ஆதாரங்களை இழந்த சில பிடிபிடிஎன் கடன் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் நிதிக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் கவனித்து வருகிறது என்று அவர் கூறினார்.

இந்த அறிவிப்பு கடன் பெற்றவர்களின் சுமையை குறைக்கும் என்று அமைச்சகம் நம்புவதாக அவர் கூறினார்.