Home One Line P2 முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்19 தொற்று

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்19 தொற்று

476
0
SHARE
Ad

புது டில்லி: முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும், கொவிட்19 பரிசோதனை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.

வேறு சில காரணங்களுக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த போது, அங்கு கொவிட்19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்19 தொற்றால் 62,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலமாக, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22 இலட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த தொற்றின் காரணமாக மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 44,386- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொவிட்19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 15.3 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று, நாண்காவது நாளாக இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 60,000- க்கும் மேல் பதிவாகியுள்ளது.

உலகளவில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆறு நாட்களாக அமெரிக்கா, பிரேசிலை விட பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் பதிவாகி வருகிறது.

மகாராஷ்டிரா (12,248), ஆந்திரா (10,820), தமிழகம் (5,994), கர்நாடகா (5,985), உத்தர பிரதேசம் (4,571), பீகார் (4,157) மேற்குவங்கம் (2,939) உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமான புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன.