Home One Line P1 மொகிதின்: பூமிபுத்ரா அல்லாதவர்களின் நலனும் பேணப்படும்

மொகிதின்: பூமிபுத்ரா அல்லாதவர்களின் நலனும் பேணப்படும்

468
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வறுமை ஒழிப்பு திட்டம் இன முக்கியதுவத்தைக் கருத்தில் கொள்வதோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் நியாயமான, சமமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பல்வேறு காரணிகளையும் செயல்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டின் செல்வத்தை மக்களுக்கு சமமாக விநியோகிக்கவும், அனுபவிக்கவும் முடியும் என்பதை இது உறுதி செய்வதாக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார்.

“தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கொள்கை ஒரு விரிவான வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்துவதாகும். இது பூமிபுத்ரா மற்றும் பூமிபுத்ரா அல்லாத, வட்டாரம், வட்டாரம் சாரா, சபா, சரவாக் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறது,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கிளந்தான், திரெங்கானு, சபா மற்றும் சரவாக் ஆகிய நாடுகளில் வறுமையை சமாளிக்க அரசாங்கத்தின் முன்முயற்சிகளைப் பற்றிய கேள்விகளுக்கு டத்தோ ரசாலி இட்ரிஸுக்கு பதிலளித்தபோது மொகிதின் இவ்வாறு கூறினார்.

பூமிபுத்ரா சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, பூமிபுத்ரா அல்லாததை அரசாங்கம் ஓரங்கட்டுவதாக அர்த்தமல்ல என்று அவர் கூறினார். எனவே, அனைத்து இனங்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு ‘பகிரப்படும் செழிப்பு பார்வை’ கொள்கை உருவாக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆயினும்கூட, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டை பூமிபுத்ரா மக்கள் ஆக்கிரமித்துள்ளதால், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் அவர்கள் மீது கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பூமிபுத்ரா அல்லாதவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அரசாங்கம் எப்போதும் அக்கறை கொண்டுள்ளதாகவும், குறிப்பாக வறுமை அடிப்படையில் அவற்றை புறக்கணிக்காது என்றும் மொகிதின் கூறினார்.

“நாங்கள் அவர்களை வறுமையில் வாழ அனுமதிக்க முடியாது. மலாய்க்காரர்கள் பணக்காரர்களாக இருக்க மட்டுமே நாங்கள் உதவ முடியாது.

“நாட்டின் அனைத்து இனங்களுக்கும் ஒரு நியாயமான கொள்கையை நாம் கொண்டிருக்க வேண்டும், ” என்று அவர் கூறினார்.

பூமிபுத்ரா பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, தொழில்துறை, வங்கி, உற்பத்தி மற்றும் மின்னியல் போன்ற சில துறைகளில், அவர்கள் பங்கேற்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று மொகிதின் கூறினார்.

அங்கு அரசாங்கம் அவர்களின் பலவீனங்களை அடையாளம் காணவும், அவர்கள் பின்தங்கியிருக்காததை உறுதிப்படுத்தவும் சில முயற்சிகளை அறிமுகப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.