Home One Line P1 கொவிட்19: கெடாவில் 16 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: கெடாவில் 16 சம்பவங்கள் பதிவு

442
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 24 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இன்று 7 பேர் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 9,143 பேர் கொவிட்19 பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளனர்.

எழுவர் இன்னும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் நால்வருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதன் மூலமாக தற்போது செயலில் உள்ள தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 322-ஆக அதிகரித்துள்ளது.

மொத்தம், 18 சம்பவங்கள் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில், ஆறு சம்பவங்கள் இறக்குமதி சம்பவங்கள் ஆகும்.

நாட்டில் தொற்று ஏற்பட்ட 18 சம்பவங்களில், 16 மலேசியர்கள் மற்றும் இரண்டு குடிமக்கள் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டவையாகும்.

கெடாவில் பதினாறு சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சுங்கை தொற்றுக் குழுவிலிருந்து 13 புதிய சம்பவங்கள் பதிவாகின. தாவார் தொற்றுக் குழுவிலிருந்து ஒரு சம்பவம், தெலகா ஒரு சம்பவம் மற்றும் சுல்தானா பஹியா மருத்துவமனையில் அறிகுறி பரிசோதனையிலிருந்து ஒரு சம்பவம் பதிவாகியது.

இதற்கிடையில், சபாவில், கடந்த இரண்டு நாட்களில் கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்த லாஹாட் டாத்து தொற்றுக் குழுவிலிருந்து இரண்டு புதிய சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.

எனினும் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் கொவிட்-19 பாதிப்பால் மரணமடையவில்லை. தொடர்ந்து மரண எண்ணிக்கை 128 ஆக இருந்து வருகிறது.