Home One Line P1 கொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை!

கொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை!

1021
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் இன்று வியாழக்கிழமை நண்பகல் வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 62 புதிய கொவிட்-19 சம்பவங்களை பதிவு செய்துள்ளது. இதில் 61 உள்ளூர் நோய்த்தொற்றுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு சம்பவம் ஆகியவை அடங்கும்.

இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் மலேசியர் ஆவார்.

புதிய சம்பவங்களைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 10,031 சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

26 பேர் இன்று சிகிச்சை குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

இதுவரையில் மொத்தமாக 9,235 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 668 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.

உள்நாட்டில் பீடிக்கப்பட்ட 61 சம்பவங்களில் 41 பேர் மலேசியர்கள், 20 பேர் வெளிநாட்டவர்.

இன்றைய மொத்த தொற்றுகளில் 59 சம்பவங்கள் சபா மாநிலத்தில் இருந்து மட்டும் பீடிக்கப்பட்டதாகும். இவற்றில் 48 தொற்றுகள் பெந்தெங் தொற்றுத் திரள் மூலம் பரவியதாகும். இந்த 48 தொற்றுகளில் 20 வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்டதாகும்.

சபாவைத் தவிர்த்து கெடாவில் ஒரு சம்பவமும் பினாங்கு மாநிலத்தில் ஒரு சம்பவமும் பதிவாகியிருக்கிறது.

மரண எண்ணிக்கை ஏதும் இல்லை என்பதால் மொத்த மரண எண்ணிக்கை 128 ஆக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.