Home One Line P1 கொவிட்19: மலேசியா மூன்றாவது அலையை எதிர்நோக்குகிறது

கொவிட்19: மலேசியா மூன்றாவது அலையை எதிர்நோக்குகிறது

507
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு தற்போது கொவிட்19 பாதிப்பின் மூன்றாவது அலையை எதிர்கொள்கிறது. அடிக்கடி மக்கள் செல்லும் இடங்கள் இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட முதல் அலையானது, பெரும்பாலும் இறக்குமதி சம்பவங்களாகும். மார்ச் மாதத்தில் இரண்டாவது அலை தப்லீக் உள்ளடக்கியது. இந்த சமீபத்திய அலை நகரத்திற்கு அருகில் பரவத் தொடங்கியுள்ளது. மேலும், தொடர்ந்தார் போல ஆங்காங்கே தொற்று ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

சபாவுக்கு பயண வரலாற்றைக் கொண்ட தனிநபர்களிடமிருந்து பல புதிய தொற்றுக் குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு சில மாவட்டங்கள் இப்போது கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

சபாவில் கொவிட்19 சம்பவங்கள், செப்டம்பர் மாத தொடக்கத்தில் தவாவ் சிறைச்சாலையில் கண்டறியப்பட்டது.

அதே நேரத்தில், சபா மாநிலத் தேர்தலும் நடந்தது. நாடு முழுவதிலுமிருந்து அரசியல்வாதிகள் தங்கள் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய அம்மாநிலத்திற்கு சென்றனர்.

இதேபோல், சுற்றுலாப் பயணிகளும் அந்த காலகட்டத்தில் சபாவுக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பியதும், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கொவிட்19 சம்பவங்கள் கண்டறியப்பட்டன.

இந்த இடங்கள் பாதுகாப்பான செயல்முறைக்கு உட்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நேற்றைய நிலவரப்படி, மலேசிய வரலாற்றில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. நேற்று மட்டும் 432 சம்பவங்கள் பதிவாகின.

பதிவு செய்யப்பட்ட தொற்று சம்பவங்களின் அடிப்படையில் நாட்டில் பதிவு செய்யப்பட்ட  மொத்த சம்பவங்கள் 12,813 ஆகும். 429 தொற்று சம்பவங்களில் 409 உள்ளூர்வாசிகள், 20 பேர் வெளிநாட்டினர்.

57 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மொத்தமாக மருத்துவமனையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 10,340 ஆகும்.

இன்னும் 2,336 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். என்மருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.