Home One Line P1 கொவிட்19: 12 பேர் மரணம்- 1,054 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: 12 பேர் மரணம்- 1,054 சம்பவங்கள் பதிவு

623
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 1,054 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

இதில் உள்ளூர் தொற்றுகள் 1,040 சம்பவங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களில் 14 பேருக்கு தொற்றுக் கண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 34,393 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

678 தொற்றுகளுடன் அதிக தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சபா இருந்து வருகிறது. சிலாங்கூரில் 124 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இன்று 875 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இதனிடையே, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 23,995– ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இந்த விவரங்களை வெளியிட்டார்.

மொத்தம் 10,135 பேர் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 94 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 32 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று 12 பேர் மரணமுற்ற நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 263- ஆக உயர்ந்துள்ளது.