Home உலகம் வெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் – பீதி‌யி‌ல் மக்கள்

வெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் – பீதி‌யி‌ல் மக்கள்

615
0
SHARE
Ad

img1130125013_1_1தென் ஆப்பிரிக்கா, ஜன.26-தென் ஆப்பிரிக்காவில் உள்ள ரக்வேனா முதலைகள் பண்ணையிலிருந்து 15,000 முதலைகள் தப்பித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வடக்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கி‌ல் சிக்கி முதலைகள் உயிரிழப்பதை தவிர்க்கும் பொருட்டு, ரக்வேனா முதலை பண்ணையின் உரிமையாளர்கள், சுமார் 15000 முதலைகள் அடைக்க‌ப்ப‌ட்டிரு‌ந்த தடத்தின் கதவை திறந்துவிட்டனர்.

#TamilSchoolmychoice

வெளியேறிய முதலைகள் வெள்ளத்தில் ஆங்காங்கே அடித்து செல்லப்பட்டு 120 கி.மீ தூரத்து‌க்கு செ‌ன்றதாக பண்ணையின் உரிமையாளர் செங் லாங்க்மன் கூறியுள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், பண்ணையிலிருந்து வெளியேறிய முதலைகளைப் பிடிக்க ராணுவ‌த்த‌ி‌ன் உதவியை நாடியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.