இதில் உள்ளூரில் 1,699 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 5 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 119,077 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இன்னும், 21,365 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 124 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 51 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்றுவரையிலான ஒருநாளில் 11 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 494 -ஆக உயர்ந்துள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் சபா 316 சம்பவங்களோடு இரண்டாவது நிலையில் இருந்து வருகிறது.
ஜோகூரில் 179 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 112 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பினாங்கு மாநிலத்தில் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்திருக்கின்றன.