Home One Line P1 பாலிக் பூலாவில் கொவிட்-19 நோயாளிகள் நெரிசலில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

பாலிக் பூலாவில் கொவிட்-19 நோயாளிகள் நெரிசலில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

304
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் அறிகுறிகளற்ற கொவிட் -19 நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்படும் மையம் அதிகமான நோயாளிகளால் நிரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள நோயாளிகள் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றாக நெரிசலில் சிக்கி நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் கூறியுள்ளனர்.

உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, பாலிக் பூலாவ் விளையாட்டு வளாகத்தைப் பயன்படுத்தும் தற்காலிக மையத்தில், ஒரே நேரத்தில் 400- க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். மேலும் ஒவ்வொரு முறையும் உணவு வழங்கும்போதும், பிரார்த்தனை செய்வதிலும் அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

நோயாளிகள் 10 கழிப்பறைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு நீண்ட வரிசையை ஏற்படுத்துகிறது. சிலர் ஒரு மணி நேரம் தங்கள் முறைக்கு காத்திருக்க வேண்டியிருக்கிறது என்று உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.

“இந்த மையத்தில் சுமார் 432 கொவிட் -19 நோயாளிகள் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. 400 க்கும் மேற்பட்ட நபர்களைப் பூர்த்தி செய்ய போதுமான வசதிகள் இல்லாததால் அவர்கள் கழிப்பறையைப் பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டும்,” என்று புலாவ் பெடோங் மாநில சட்டமன்ற உறுப்பினர் முகமட் துவா இஸ்மாயில் தெரிவித்தார்.

அங்கு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நோயாளி, நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் இங்கு அனுசரிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆயினும், எழுந்துள்ள புகார்களில் சில உண்மையில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.