Home One Line P1 சீனா தொடர்ச்சியாக 100-க்கும் அதிகமான சம்பவங்களை பதிவு செய்துள்ளது

சீனா தொடர்ச்சியாக 100-க்கும் அதிகமான சம்பவங்களை பதிவு செய்துள்ளது

426
0
SHARE
Ad

பெய்ஜிங்: சீனா தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 100- க்கும் மேற்பட்ட புதிய கொவிட் -19 சம்பவங்களைப் பதிவுசெய்துள்ளது.

சீனாவின் வடகிழக்கில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் அங்கு மேலும் ஒரு கவலையைத் தூண்டி உள்ளது.

தேசிய சுகாதார ஆணையம் திங்களன்று ஓர் அறிக்கையில் ஜனவரி 17 அன்று மொத்தம் 109 புதிய கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

93 உள்ளூர் தொற்றுநோய்களில், 54 பெய்ஜிங்கைச் சுற்றியுள்ள ஹுபே மாகாணத்தில் பதிவாகியுள்ளன. வடகிழக்கு ஜிலின் மாகாணத்தில் 30 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது புதிய தொற்று குழுக்களை உருவாக்கும் அபாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை 89,336- ஆகும். அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை மாறாமல் 4,635- ஆக உள்ளது.