Home One Line P1 13 தொகுதிகளுக்காக தேசிய கூட்டணி உறவை முறித்துக் கொள்ள வேண்டாம்

13 தொகுதிகளுக்காக தேசிய கூட்டணி உறவை முறித்துக் கொள்ள வேண்டாம்

523
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 14- வது பொதுத் தேர்தலில் வென்ற கட்சியின் பாரம்பரிய இடத்தைப் பற்றி விவாதிக்க பேச்சுவார்த்தைக்கு வருமாறு, தேசிய கூட்டணி தகவல் தொடர்புத் தலைவர் முகமட் அஸ்மின் அலி அம்னோவை அழைத்துள்ளார்.

14- வது பொதுத் தேர்தலில் அம்னோ வென்ற 13 தொகுதிகள், இப்போது பெர்சாத்து வசம் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அம்னோவிலிருந்து பெர்சாத்துவிற்கு கட்சித் தாவிய பின்னர், அம்னோவிற்கும் பெர்சாத்துவிற்கும் இடையிலான பிளவு அதிகமானது.

அதன் அனைத்து பாரம்பரிய இடங்களையும் பாதுகாக்கும் என்று தேசிய முன்னணி முன்பு எச்சரித்திருந்தது.

#TamilSchoolmychoice

இருப்பினும், தொகுதி தகராறு காரணமாக அரசாங்கத்திலும், அரசியலிலும் ஒத்துழைப்பை தியாகம் செய்வது பொருத்தமானதல்ல என்று அஸ்மின் நம்புகிறார்.

“13 இடங்கள் மட்டுமே சர்ச்சையில் உள்ளன. அவர்கள் வேறொரு கட்சியின் (அம்னோ) பெயரில் வென்றார்கள். பின்னர் அவர்கள் வேறு கட்சிக்கு (பெர்சாத்து) சென்றார்கள். ஆனால், இந்த 13 இடங்களுடன் 222 இடங்களை அழிக்க விரும்புகிறோம். இந்த 13 இடங்களுக்காக நாம் ஒன்றாகக் கட்டியெழுப்பிய அரசாங்கத்தை கவிழ்க்க விரும்புகிறோமா? எனவே, நான் ஓர் அணுகுமுறையை எடுக்க விரும்புகிறேன், அதுதான் பிரச்சனை என்றால், இந்த 13 இடங்கள் குறித்த விவாதத்தில் கவனம் செலுத்துவோம், ” என்று அவர் சினார் ஹரியனுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

“இந்த 13 இடங்களும் எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் கூறவில்லை. அது அவர்களின் கோரிக்கை என்றால், பேசலாம். இந்த 13 நாடாளுமன்ற இடங்களால், முழு அரசாங்கமும் கவிழ்க்க விரும்புவது நியாயமானது என்று நான் நினைக்கவில்லை, ”என்று அஸ்மின் கூறினார்.