Home One Line P1 18 வயது வாக்களிக்கும் வயது வரம்பை தாமதிப்பதற்கு அளித்த காரணம் ஏற்புடையதல்ல

18 வயது வாக்களிக்கும் வயது வரம்பை தாமதிப்பதற்கு அளித்த காரணம் ஏற்புடையதல்ல

440
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 18 வயது வாக்களிக்கும் வயது வரம்பு மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவை அமல்படுத்துவதை ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்தின் காரணத்தை அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் நிராகரித்தார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, தேர்தல் ஆணையத்தின் திட்டமிடல் மற்றும் தயார்நிலையை பாதித்ததற்கான காரணமும் நியாயமற்றது, ஏனெனில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

அடுத்த ஜூலை முதல் 2022 செப்டம்பர் வரை ஒத்திவைப்பு என்பது ஒரு வருடத்திற்கும் மேலானது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் ஆணையத் தலைவரின் அறிக்கைக்கு இது முரணானது. இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் ஏற்பாடுகள் நிறைவடையும் என்று அவர் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் கானி சல்லே, நேற்று 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் 1- ஆம் தேதிக்குப் பிறகு மட்டுமே 18 வயது வாக்களிக்கும் முறை செயல்படுத்தப்படும் என்று கூறினார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றி அவற்றின் ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், அனைத்து திருத்தங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாவிட்டால், வாக்களிக்கும் வயது வரம்பைக் குறைத்து, 18 வயது வரம்பை முதலில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இளைஞர் விளையாட்டு அமைச்சர் ரீசால் பரிந்துரைத்தார்.