Home One Line P1 பெஜுவாங்: ஆட்சி அமைப்பதில் கட்சி முக்கிய அங்கம் வகிக்கும்

பெஜுவாங்: ஆட்சி அமைப்பதில் கட்சி முக்கிய அங்கம் வகிக்கும்

789
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் அரசியல் நிலைமை இப்போது இருப்பதை போல இருக்காது என்று டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

அடுத்த முறை மொகிதின் யாசின் பிரதமராக இருக்க மாட்டார் என்று மகாதீர் கணித்துள்ளார்.

பெர்சாத்து இப்போது பல சமூகங்கள் அங்கத்துவம் உள்ள கட்சியாகப் பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார். ஆகவே, பொதுத் தேர்தலில் பல இடங்களை அது வெல்ல வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அதனுடன், தேசிய கூட்டணி மற்றும் முவாபாக்கட் நேஷனல் கூட்டணியில் உள்ள பெர்சாத்துவிலிருந்து வேறொருவரை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

“பெர்சாத்து நம்பிக்கை கூட்டணியை விட்டு வெளியேறி முவாபாக்காட் நேஷனலுடன் இணைந்தால் மட்டுமே அவர்கள் பெரும்பான்மை கூட்டணியாக இருக்க முடியும் என்பதைக் கருதி, அம்னோவும் பாஸ் முதன்முதலில் மொகிதினுக்கு பிரதமர் பதவியை வழங்கினர்.

“15- வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் நிலைமை வேறுபட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், மொகிதின் பிரதமராக இருக்க மாட்டார், ” என்று அவர் தனது வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளார்.