Home One Line P1 தேசிய கூட்டணியில் இணைவதற்கு துன் மகாதீர் அழைக்கப்படுகிறார்

தேசிய கூட்டணியில் இணைவதற்கு துன் மகாதீர் அழைக்கப்படுகிறார்

720
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைய யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அதன் தலைமைச் செயலாலர் ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மலேசியாகினியுடனான ஒரு நேர்காணலில், தமக்கு தேசிய கூட்டணியில் இணைய அழைப்புகள் இருந்ததாக துன் மகாதீர் கூறியிருந்தார்.

அரசியலமைப்பில் உள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்படும் வரை யார் வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஒருவர் இணையவோ, வெளியேறவோ, அவர்களின் கருத்துக்களை வழங்கவும் சுதந்திரம் உள்ளது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, தம்மை தேசிய கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக துன் மகாதீர் கூறியிருந்தார்.

புதன்கிழமை மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், மகாதீர் தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்த சில ‘குற்றவாளிகளுடன்’ பணியாற்ற முடியாததால் இந்த முயற்சி தோல்வியுற்றதாகக் கூறினார்.

இருப்பினும், சம்பந்தப்பட்டவர் தேசிய கூட்டணிக்கு வெளியே இருந்தால் நிலைமை வேறுபட்டிருக்கலாம் என்று மகாதீர் கூறினார்.

“அந்நேரம் மட்டுமல்ல (ஷெராடன் மூவ்), இப்போது கூட என்னை உள்ளே இழுக்கும் முயற்சி உள்ளது. என்னால் முடியாது. நஜிப்பை (ரசாக்) நிராகரிக்கிறேன் என்று மக்களுக்கு நான் வாக்குறுதி அளித்தேன், நஜிப்புடன் என்னால் ஒத்துழைக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

நம்பிக்கை கூட்டணி வீழ்ச்சியிலிருந்து, மகாதீர் ஊழல்வாதிகளுடன் பணியாற்றுவதற்கான முயற்சிகளை எதிர்ப்பதாகக் கூறியுள்ளார். நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களை அவர் குறிப்பிடுகிறார்.