Home உலகம் சிங்கப்பூரில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென்பதை மக்கள் தேர்வு செய்யலாம்

சிங்கப்பூரில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென்பதை மக்கள் தேர்வு செய்யலாம்

517
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் எந்த கொவிட் -19 தடுப்பூசி எடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய விரும்புவோர் சுகாதார அமைச்சின் வலைத்தளத்தைப் பார்த்து தேர்வு செய்துக் கொள்ளலாம். அங்கு தடுப்பூசி மையங்கள் மற்றும் தடுப்பூசிகளின் முழு பட்டியல் பட்டியலிடப்பட்டுள்ளது.

38 மையங்களில் 11- இல் மாடர்னா தடுப்பூசி வழங்கப்படுகிறது. மீதமுள்ளவை பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்துகின்றன.

மக்கள் எந்த தடுப்பூசி மையம் அல்லது மையத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள் என்பதைத் தேர்வுசெய்ய முடிகிறது.

#TamilSchoolmychoice

பிபைசர் தடுப்பூசி சிங்கப்பூரில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட முதல் கொவிட் -19 தடுப்பூசி ஆகும். கடந்த டிசம்பரில் அது பெறப்பட்டது.

“ஒவ்வொரு தடுப்பூசி மையமும் ஒரு வகை தடுப்பூசியை மட்டுமே சேமித்து வைக்கும். தனிநபர்கள் தங்கள் முதல் மற்றும் இரண்டாவது சந்திப்புகளுக்கு ஒரே தடுப்பூசி மையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்று சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.