Home உலகம் ஈரோ 2020 : டென்மார்க், பின்லாந்து ஆட்டம் தற்காலிக நிறுத்தம்

ஈரோ 2020 : டென்மார்க், பின்லாந்து ஆட்டம் தற்காலிக நிறுத்தம்

580
0
SHARE
Ad
காற்பந்து மைதானத்தில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டென்மார்க் விளையாட்டாளர் கிறிஸ்டியன் எரிக்சன்

கோப்பன்ஹேகன் (டென்மார்க்) : (குறிப்பிடப்படும் நேரங்கள் மலேசிய நேரங்களாகும்) ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 12) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற டென்மார்க், பின்லாந்து இடையிலான இரண்டாவது ஆட்டம் இடைவேளை நேரத்தை நெருங்கும் நேரத்தில் விளையாட்டாளர் ஒருவர் காயமடைந்ததால் நிறுத்தப்பட்டது.

டென்மார்க் காற்பந்து குழுவின் அந்த விளையாட்டாளரான கிறிஸ்டியன் எரிக்சன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம், ரஷியா ஆகிய இருநாடுகளும் களம் காண்கின்றன. ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

எல்லா ஆட்டங்களும் ஆஸ்ட்ரோவில் நேரலையாக ஒளிபரப்பாகின்றன.

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள்

இத்தாலி 3 – துருக்கி 0

சுவிட்சர்லாந்து 1 – வேல்ஸ் 1