சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 701,019 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறினார்.
மொத்தம் பதிவான 4,611 தொற்று சம்பவங்களில் 4,590 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 21 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 62,918 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 880 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 452 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 69-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 4,477-ஆக உயர்ந்திருக்கிறது.
சிலாங்கூரில் 1,346 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து சரவாக் (682), பேராக் (453), நெகிரி செம்பிலான் (437), ஜோகூர் (314), கோலாலம்பூர் (310), மலாக்கா (205), கிளந்தான் (219), கெடா (182), சபா (166) , லாபுவான் (130), பினாங்கு (84), பகாங் (50), திரெங்கானு (18), புத்ராஜெயா (15).